செவ்வாய், 27 நவம்பர், 2018

பாளையம்புதூர்

                  நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட  ஒரு ஊராட்சியின் பெயர் பாளையம்புதூர் ஆகும். வரலாற்றில் இங்கு எப்போதும் ஒரு படைப்பிரிவு இருந்து வந்துள்ளது. எனவே இந்த ஊருக்குப் பாளையம் என்று பெயர் வந்துள்ளது.  இன்றுள்ள இந்த ஊர் புதிதாக உருவானதால் பாளையம்புதூர் என்று வழக்கத்தில் வந்தது.  தொப்பூர் கணவாய் வழியாக  தகடூர் நாட்டிற்குள் நுழையும் எதிரிப்படைகளை தடுத்து நிறுத்துவதற்காகவே இப்படைப் பிரிவு இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்விடத்தைச் சுற்றி பல போர்கள் நடந்திருக்கின்றன.  பல நடு கற்களும் வீர கற்களும் இதற்கு சான்றாக உள்ளன.  
             "தண்டு" என்றால் " படை". இப்படையில் பணியாற்றிய ஒருவன் பெயரால் உருவான ஊரே "தண்டுகாரன்பட்டி" என்பதாகும். பாளையத்திற்கு மிக அருகில் இந்த ஊர் இருப்பதை இங்குப் பொருத்திப் பார்க்கவேண்டும். 

ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )
 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக