தருமபுரிக்கு மிக அருகாமையில் இன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ள ஓர் இடம் "பதிகால் பள்ளம்" என்று அழைக்கப்படும் இடத்திற்கு "குதிரைக்கொல்லை" என்று பழங்காலத்தில் பெயர். இன்றும் தருமபுரி குமரசாமிபேட்டை மக்கள் இப்பகுதியை குதிரைக்கொல்லை என்றே அழைக்கின்றனர். அதியர்கள் குதிரைமலைக்குத் தலைவர்கள். குதிரைகள் நிறைய வளர்த்து வந்துள்ளனர் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விடங்கள் குதிரைகள் மேயும் இடமாக இருந்திருத்தல் வேண்டும். இன்றைய மூக்கனூர்மலை அன்றைய குதிரை மலையாக இருக்கலாம் என்று ஆய்வார்கள் கருதுகின்றனர்.
ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி, அரும்பொருட்காட்சியக
திறப்புவிழா மலர் - தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப்
பேரவை வெளியீடு -1979 (பக்: 31-33) )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக