செவ்வாய், 27 நவம்பர், 2018

பென்னாகரம்


            "பெண்" என்றால் தெலுங்கு மொழியில் "பெரிய" என்று பொருள்.  நகரம் இத்துடன் சேர்ந்து பெண்ணாகரம்  ஆகி நாளடைவில் மறுவி "பென்னாகரம்" ஆயிற்று.  இங்குள்ள பிராமணர் தெருவில் உள்ள சிவன் கோவிலுக்கு "கோட்டை சிவன் கோவில்" என்று பெயர்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கோட்டையில் இருந்த சிவன் கோவிலைப் பிரித்து வந்து இங்கு கட்டியுள்ளனர். இக்கோட்டை இன்று சிதிலமடைந்து விளைநிலங்களாக மாறிவிட்டன.  இங்குள்ள ஆங்கிலேய தளபதியின் சமாதியும் கொடிமேடைகளும் இன்றும் பார்க்கக் கூடியதாக உள்ளன. பல அரசர்களின் கையில் இந்த கோட்டை இருந்து வந்துள்ளது.  இறுதியாக இந்தக் கோட்டையை திப்பு சுல்தானிடம் இருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.  சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு ஒரு படைப்பிரிவு இருந்துள்ளது.  பின்னர் அந்தப் படைப்பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது.


ஆதாரம்: சில வரலாற்றுச் சிதைவுகள் – இரா.துரைசாமி,  அரும்பொருட்காட்சியக திறப்புவிழா மலர் -  தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு -1979   (பக்: 31-33)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக