இன்றைய தருமபுரி மாவட்டம் |
இந்திய தேசத்தின்
மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டம் 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி உருவானது. 1801ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இன்றைய சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 7530 சதுர கி. .பரப்பளவை உடைய அன்றைய சேலம் மாவட்டம் மூன்று பெரிய
மண்டலங்களைக் கொண்டிருந்தது.
1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ந்தேதி, அப்போதைய சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு சென்னை
மாகாணத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் தருமபுரி மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தில் இன்றைய கிருஷ்ணகிரி
மாவட்டமும் அடங்கும். இம் மாவட்டம் ஏறத்தாழ 9640.77 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.
தருமபுரி
மாவட்டத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 9ஆம் தேதி அன்று தருமபுரியிலிருந்த 7 வருவாய் வட்டங்களை
தனியே பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டமாக தமிழக
அரசால் 30 ஆவது மாவட்டமாக
உருவாக்கப்பட்டது. தற்போதைய தருமபுரி
மாவட்டத்தின் பரப்பளவு 4497.77 ச.கி.மீ. இது மொத்த தமிழ் நாட்டின் பரப்பளவில் சுமார் 3.46 சதவீதமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக