திங்கள், 28 ஜனவரி, 2019

அருச்சுணன், க.



அருச்சுணன், க

சேலம் தாரமங்கலத்தை அடுத்த முத்துநாயக்கன் பட்டியை சொந்த ஊராகக்கொண்ட இவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் ஏழாவது பொதுத்தேர்தலில், தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார்.
1944 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22-இந் தேதியில் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த திரு. கட்டியண்ணன் தம்பதியினருக்கு பிறந்த இவர், சென்னை இலயோலா கல்லூரியில் படித்து இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். 
1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அன்று இவருக்கும் கலாவதி என்பாருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் காவல்துறையில் 1967 முதல் 1978 வரை உதவி ஆய்வாளராகவும் பின்னர் ஓராண்டு துணை ஆய்வாளராகவும் பணியாற்றியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக