செவ்வாய், 29 ஜனவரி, 2019

மொரப்பூர்-தருமபுரி-ஹோசூர் ரயில் பாதை


அன்றைய ஆங்கிலேய அரசின் சார்பாக, "மெட்ராஸ் ரயில்வே கம்பெனி" என்ற இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்த நிறுவனம், பஞ்ச நிவாரணம் போக்க மக்களுக்கு யாதொரு  கூலியுமின்றி  உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கி,  இரண்டு ரயில் பாதைகளை  அமைக்கும்  பணியைத் தொடங்கியது. 1904 ஆம் ஆண்டுதிருப்பத்தூர் - கிருஷ்ணகிரி வரையிலும் ஒரு பாதையும், 1906 ஆம் ஆண்டில் மொரப்பூரிலிருந்து தருமபுரி வரையிலும்  ஒரு ரயில் பாதை அமைக்கும்  பணியைத் தொடங்கியது. இது தனது பணிகளை 31-12-1907 ஆம் ஆண்டு முடித்தது.  இவைகள் இரண்டுமே  2.5 அடி அகல ரயில் பாதைகளாகும். 1909 ஆம் ஆண்டு  சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனி ஒப்பந்த தாரராக நியமிக்கப்பட்டுமொரப்பூர் - தருமபுரி ரயில் பாதையை மீண்டும் விரிவுபடுத்தி ஹோசூர் வரை நீட்டித்து சுமார் 73 கி.மீ. நீளத்திற்குப் பாதை அமைக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது
(தி கிரேட் சதர்ன் ஆப் இந்தியா ரயில்வே கம்பெனி இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு பதிவு செய்து இயங்கிவந்த ஒரு கம்பெனி ஆகும். அதேபோல தி கர்நாடிக் ரயில்வே கம்பெனி 1869 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். இவைகள் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனி என்ற பெயரில் 1890 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பதிவு செய்யப்பட்டு திருச்சிராப் பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.  1891 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி ரயில்வே கம்பெனி (இது 1845 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது)  தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனியுடன் இணைக்கப்பட்டு இதன் தலைமையகத்தை முதலில் மதுரையிலும் பின்னர் சென்னை சென்ட்ரலுக்கும் மாற்றியமைக்கப்பட்டது). 
இந்த சாலைகள் ஆங்கிலேய அரசாங்கத்தின் சொத்தாக இருப்பினும்தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனிதான் (SIR) 1913 முதல் மொரப்பூர்-ஹோசூர் ரயில்வே என்ற புதிய பெயரிட்டு இந்த ரயில் பாதையை பராமரித்து வந்தது. 1913 ஆம் ஆண்டு  தருமபுரி - ஹோசூர்   ரயில் பாதையை மீட்டர் காஜ் பாதையாக மாற்றி அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே தொடங்கியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக