செவ்வாய், 29 ஜனவரி, 2019

தீர்தமலையில் உள்ள தீர்த்தங்கள்


அக்னி தீர்த்தம் 
அக்னி தீர்த்தம்
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்த மலையில் உள்ள 5 தீர்த்தங்களுள் ஒன்று இந்த அக்னி தீர்த்தம். தீர்த்தகிரி தல புராணத்தின்படி அக்னித்  தேவனுக்குப்  பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தம்  சளித் தொல்லைகளை அகற்றும் ஆஸ்துமா நோயை குணமாக்கும். உடலை சமநிலையில் வைத்திருக்கும். 

அகத்தியர் தீர்த்தம் 
அகத்தியர் தீர்த்தம் 

தீர்த்தகிரி தல புராணத்தின்படி, அகத்திய முனிவரின் குன்ம (வயிற்றுப்புண்) நோயினை நீங்க சிவனால் அருள்பெற்றது இந்த தீர்த்தம்.  தாமிர சத்தும், மூலிகைகளின் சக்தியும் கொண்டது இந்த அகத்தியர் தீர்த்தம். இதனைக் குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் குணமாகி, சீரண சக்தி கிடைக்கும். வயிற்று உபாதைகள் நீங்கும். 

இராமர் தீர்த்தம் 
இராமர் தீர்த்தம் 
தீர்த்தமலைக்கோயிலின் பின்புறம் ராமபிரான் உருவாக்கிய ராமதீர்த்தம், ராமபிரானின்  பாணத்தால் தோன்றியதாகும்.  இந்த ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் ராம ஜெயம்என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம். இதில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும்மேலும் உடல்ரீதியான எந்தவித நோயாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள். 


குமாரத் தீர்த்தம் 
தீர்த்தமலையின் பதினொரு தீர்த்தங்களுள் ஒன்று, குமார தீர்த்தம். சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே குமார தீர்த்தம்என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்

கௌரி தீர்த்தம்
கௌரி தீர்த்தம் 
இது தீர்த்தமலையில் உள்ள பதினொரு தீர்த்தங்களுள் ஒன்று. இது  அன்னை வடிவாம்பி கைக்காக வழங்கப் பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும். சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்

இந்திர தீர்த்தம்
தீர்த்தமலைக்கு கீழே மலைக்குத் தென்கிழக்கே அரூர்-தீர்த்தமலை-பையர்நாய்க்கன்பட்டி செல்லும் சாலையில், வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட  மொண்டுக்குழி என்னும் கிராமம் உள்ளது. இது தென்பெண்ணை ஆற்றின் கரைப் பகுதியில் உள்ளது. இங்குள்ள சிறு சிவன் கோவிலிலுள்ள மூலவர் தீர்த்தகிரீஸ்வரர் என்றும் பின்னாளில் இங்கிருந்து மூலவர் சிலையை தீர்த்தமலை கோவிலுக்குக் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யதாக ஒரு செவிவழி கதை உண்டு.

எமதீர்த்தம்
எமதீர்த்தம்
தீர்த்தமலையின் பின்புறம் வேப்பம்பட்டி எனும்  கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் எமதீர்த்தம் உள்ளது. இம்மலையின் பின்புறம் உள்ள மலைத்தொடர்களுக்கு இடையே உயர்ந்த சிகரத்தினின்று ஓர் அருவி ஓடி ஓடையாக  அடிவாரத்தில் ஓடுகிறது. இந்த அருவி விழும் பாறையில் படர்ந்துள்ள மரவேர்களுக்கு கீழே சிறு குழியில் நிரம்பியுள்ள நீரே யம தீர்த்தம்எனப்படும் தருமர் தீர்த்தம்’. இவை வற்றுவதில்லை. இதனை ஒட்டி அழகான ஒரு சிறிய சிவன் கோவில் உள்ளது. அழகிய வேலைப்பாட்டுடன் இரட்டை நந்திகள் கருவறையின் முன்னே அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு வரும்பாதை முழுவதும் சீராகக் கற்கள் புதைக்கப்பட்ட பாதை உள்ளது. ஒரு காலத்தில் இந்த கோவில் சீரும் சிறப்புமாக இருந்திருக்கவேண்டும். இன்று பொலிவிழந்து காணப்படுகிறது.
வசிஷ்டர் தீர்த்தம்
தீர்த்தமலையின் வடகிழக்குச் சிகரத்தின் கீழ் மகரிஷி வசிஷ்டர் தவம்  கூறப்படும் குகை உள்ளது.    இப்பாறையின் வெடிப்பிலிருந்து சொட்டுசொட்டாக வசிஷ்டர் தீர்த்தம் வருகிறது.
அனுமன் தீர்த்தம்
அனுமன் தீர்த்தம் 

அரூர்-ஊத்தங்கரை மாநில நெடுஞ்சாலையில் தென் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ளது அனுமன் தீர்த்தம். தீர்த்தமலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் அமைந்துள்ளது. இங்கு தென் பெண்ணையாற்றங்கரையில் வற்றாத கிணறு ஒன்று உள்ளது. அதில்  எப்போதும் நீர் நிரம்பி வழியும். தீர்த்தமலைக்கு வரும் பக்தர்கள், இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தீர்த்தமலைக்குச் செல்லவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இராமர் தனது சாப நிவர்த்திக்காக தீர்த்தமலை வந்து நீராடி பூசைகள் செய்யவேண்டி அனுமனிடம் நீர்கொண்டுவர பணித்தார். அவர் நீர் எடுத்து வர தாமதானதால் ராமர் மலையிலேய ஒரு தீர்த்தத்தை உருவாக்கி நீராடி பூசைகளை ஆரம்பித்துவிட்டார். இதனால் அனுமன் தான் கொண்டுவந்த தீர்த்தத்தை தூர வீசி எரிந்ததாகவும் அந்த நீர் விழுந்த இடமே அனுமன் தீர்த்தமாக பெயர் பெற்று விளங்குவதாகவும் தலபுராணம் கூறுகிறது. 
வருண தீர்த்தம் 
அரூர் நகரையொட்டிய வருணீசுவரர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள வருணீசுவரர் குளத்து நீர்தான் வருண தீர்த்தம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக